katchai0703aநிரந்தர நிம்மதியான வாழ்க்கைக்கும் பாடசாலைகளின் அபிவிருத்திக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கரங்களைப் பலப்படுத்த வேண்டும். ஏனெனில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் நாம் மக்கள் மத்தியிலேயே இருக்கின்றோம். இனியும் இருப்போம். இவ்வாறு ஈபிடிபியின் தென்மராட்சி அமைப்பாளர் சாள்ஸ் தெரிவித்தார்.
தென்மராட்சி கச்சாய் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டிகளில் பிரதம விருந்தினராக பங்குகொண்டு அங்கு உரையாற்றுகையிலேயே ஈபிடிபியின் தென்மராட்சி அமைப்பாளரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ். மாவட்ட வேட்பாளருமான சாள்ஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் இணக்க அரசியலின் மூலம் எமது மண்ணில் நாம் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி மேம்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு எமது மக்களின் நிரந்தரமானதும் நிலையானதுமான வாழ்க்கையை உறுதிபடுத்திக் கொள்வது மட்டுமன்றி பாடசாலை கல்வி மற்றும் விளையாட்டுத்துறையினை முன்னேற்றவும் எமது செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கரங்களைப் பலப்படுத்த அனைவரும் ஓரணி திரண்டு முன்வர வேண்டும்.
எக்காலத்தில் ஆகட்டும் நாம் எமது மக்களை கைவிட்டு விட்டு எங்குமே ஓடிச் சென்றது கிடையாது. யாழில் குறிப்பாக தென்மராட்சியில் பாரிய உயிர் அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்து பல உயிர்த்தியாகங்களுக்கு மத்தியில் நாம் எமது மக்களின் நலன்கருதி மக்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுப்பதற்காக எமது மக்களுடனேயே தொடர்ந்து தங்கி இருந்து செயற்படுகின்றோம். எமது செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைத் தவிர இப்பகுதியின் அபிவிருத்தி குறித்தோ இப்பகுதி மக்களின் நலன்கள் குறித்தோ தூர நோக்குடன் சிந்தித்து செயற்படுகின்றவர் வேறு எவருமே கிடையாது. இந்த நிலையில் எமது மக்களது நலன்களை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அயராது உழைத்துவரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கரங்களைப் பலப்படுத்தி பாடசாலை கல்வி உள்ளிட்ட அன்றாடத் தேவைகள் முதல் அரசியல் உரிமைப் பிரச்சினை வரை அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்வதற்கு எமது மக்கள் ஓரணி திரண்டு முன்வர வேண்டும் இவ்வாறு ஈபிடிபியின் தென்மராட்சி அமைப்பாளரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ். மாவட்ட வேட்பாளருமான சாள்ஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.