ஏ-9 தரைப்பாதையூடாக தென்பகுதியில் இருந்து யாழ் குடாநாட்டுக்கான பொருட்களைக் கொண்டுவரும் போதும் யாழ் குடாநாட்டு உற்பத்திப் பொருட்களைத் தென்பகுதிக்குக் கொண்டு செல்லும் போதும் பாதுகாப்பு கருதி சோதனை செயற்பாடுகளை மேற்கொள்கையில் அப்பொருட்களை ஏற்றி இறக்குவதற்குக் கட்டணமாக ஒரு தொன்னுக்கு 4150 ரூபா அறவிடப்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்த விடயமாகும்.
தென்பகுதியில் இருந்து பொருட்களை யாழ் குடாநாட்டிற்குக் கொண்டு வரும்போது மேற்படி ஏற்றி இறக்கும் கட்டணம் காரணமாக யாழ் குடாநாட்டில் பொருட்களின் விலை கட்டுப்பாட்டு விலைகளையும் மீறி அதிக விலைக்கு விற்கப்படுவதால் நுகர்வோர் தொடர்ந்தும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதே நேரம் யாழ் குடாநாட்டு உற்பத்திப் பொருட்களை தென்பகுதிக்குக் கொண்டு செல்லும் போது இதே விதமாக ஏற்றி இறக்கும் கட்டணம் அறவிடப்படுவதால் தென்பகுதி சந்தைகளில் தென்பகுதி உற்பத்திகளுடன் யாழ் குடாநாட்டு உற்பத்திகளுக்கு போட்டியிட முடியாத நிலை உருவாகியுள்ளதால் யாழ் குடாநாட்டு விவசாய மற்றும் கடலுணவு உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அத்துடன் தென்பகுதியில் இருந்து யாழ் குடாநாட்டுக்கு மூலப் பொருட்களைக் கொண்டுவரும் போது மேற்படி ஏற்றி இறக்கும் கட்டணம் அம்மூலப் பொருட்களின் விற்பனை விலைகளுடன் சேர்க்கப்படுவதில்லை என்பதால் அம்மூலப் பொருட்களை கட்டுப்பாட்டு விலைகளில் வழங்கும் நிலைக்கு ஆளாகும் அரச மற்றும் தனியார் ஒப்பந்தக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான பாதிப்புக்கள் தொடர்பில் உரிய தரப்பினர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் முறையிட்டதையடுத்து அமைச்சர் அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோடாபய ராஜபக்ஷ யாழ் மற்றும் வன்னி மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதிகளுடன் கலந்துரையாடியமைக்கு இணங்க மேற்படி பொருட்களை ஏற்றி இறக்கும் கட்டணம் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
யாழ் குடாநாட்டு மக்களின் நலன்கள் சார்ந்து அனைத்துத் துறைகளிலும் பல்வேறு சாதகமான நடவடிக்கைகளை தெடர்ந்து மேற்கொண்டு வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மேற்படி நடவடிக்கை காரணமாக இதன் பின்னர் யாழ் குடாநாட்டில் நியாய விலையில் அனைத்துப் பொருட்களையும் பெற்றுக் கொள்ளும் நிலை நுகர்வோருக்கு ஏற்பட்டுள்ளதுடன் தங்களது உற்பத்திப் பொருட்களை அதிகளவில் போட்டியின்றி தென்பகுதியில் சந்தைப் படுத்தக் கூடிய வாய்ப்பினையும் யாழ். குடாநாட்டு விவசாய மற்றும் கடலுணவு உற்பத்தியாளர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இதே நேரம் அரச மற்றும் தனியார் ஒப்பந்தக்காரர்களும் எவ்விதமான பாதிப்புகளும் இன்றி பொருட்களை தாராளமாகக் கொண்டு வரக் கூடிய நிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
You are here : Home » செய்திகள் » அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது நடவடிக்கையால் யாழ் குடாநாட்டிற்கான பொருட்களை ஏற்றி இறக்கும் கட்டணம் அகற்றப்பட்டுள்ளது..!
Leave a Reply
Related Articles From This Category
அரசாங்கத்துக்கு ஆதரவை வழங்கிய தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி பியசேனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை..!
Posted On Thursday, September 9th 2010நேற்று 18வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக அரசாங்கத்துக்கு ஆதரவை வழங்கிய தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி பியசேனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா எச்சரித்துள்ளார். குறித்த 18வது ... Read More
வவுனியாவில் தொழிற் கண்காட்சி..!
Posted On Thursday, September 9th 2010யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளின் நலனைக் கருத்திற் கொண்டு வவுனியாவில் தொழிற் கண்காட்சியொன்று நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 25 26 மற்றும் 27ம் திகதிகளில் வவுனியாவில் இந்த தொழிற் கண்காட்சி நடத்தப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. முன்னாள் ... Read More
வடக்கில் நிலைகொண்டிருக்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்படும் – இராணுவத் தளபதி..!
Posted On Thursday, September 9th 2010வடக்கில் நிலை கொண்டிருக்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்படும். அதன் பின்னர் வடக்கின் சிவில் நிர்வாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுமென இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ... Read More
நல்லூர் திருவிழாவில் கொள்ளையில் ஈடுபட்ட புத்தளத்தைச் சேர்ந்த 4 பெண்கள் கைது..!
Posted On Thursday, September 9th 2010நல்லூர் திருவிழாவின் போது பக்தர்களிடம் நகைகளை கொள்ளையிட்ட புத்தளத்தைச் சேர்ந்த நான்கு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். நல்லூர் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களிடம் குறிப்பாக பெண்களின் தங்க ஆபரணங்கள் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது. பொலிஸார் ... Read More
சன்சி கப்பலில் சென்றவர்களில் ஒருவர் கனடாவில் தடுத்து வைப்பு..!
Posted On Thursday, September 9th 2010எம்.வி. சன்சி கப்பலின் ஊடாக கனடாவுக்குள் சென்றவர்களில் ஒருவர் புலி உறுப்பினர் என்ற சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். புலிகளுக்கு நிதி சேகரித்தவர் என்ற பெயரில் இவர்மீது சந்தேகம் எழுந்துள்ளது. எம்.வி சன்சி கப்பலின் மூலம் ... Read More
Blogroll
-
-
Recent Comments
-
யாழ் தமிழ் மக்கள் Says: அன்று யாழ் மண்ணுக்...
-
VELNAYAGAM மகிந்தன் கொக்கட்டிச்சோலை Says: இலங்கையின் கிழக்க...
-
VELNAYAGAM மகிந்தன் கொக்கட்டிச்சோலை Says: கொக்கட்டிச்சோலை_ VEL...
-
saran Says: new news...
-
K.Kanagasundaram, Jaffna,SriLanka Says: I am a Srilankan tamil congratulate Honarable Pres...
-
-
Hot Topics
- பிரபாகரன் உயிருடன் இல்லை புலிகளின் சர்வதேச பேச்சாளர் தெரிவிப்பு
5 comments received - பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் கொண்ட குழுவினர் இலங்கை வருகை
4 comments received - இராணுவத்தினரால் பிரபாகரன் சுற்றி வளைப்பு: கரையோரப் பகுதி முற்றாக விடுவிப்பு
4 comments received - பாதுகாப்பு வலயத்துக்கான சேவையை இடைநிறுத்தியது ஐ.சி.ஆர்.சி.
4 comments received - புலிகளின் `கடற்தளபதி` சூசையின் மனைவி பிள்ளைகள் உட்பட ஐந்து குடும்ப உறுப்பினர்கள் கடற்படையினரிடம் சரண்
4 comments received
- பிரபாகரன் உயிருடன் இல்லை புலிகளின் சர்வதேச பேச்சாளர் தெரிவிப்பு
-
Popular Tags
-
Blogroll
-
Meta




